Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Thursday, March 10, 2016

கேடு கொண்ட புகையே


அன்புள்ள புகையே...
நிதமும் உன்னை தின்றேன்..
தினமும் உன்னை கொன்றேன்...
உதட்டில் உன்னையும்..
நெஞ்சில் உன் கருவையும் சுமந்தேன்..
அரை அங்குல அற்புதம் என நினைத்தேன்..
துயரத்தில் மருந்தாய்..
தனிமையில் துணையாய்..
எண்ணினேன்..
நிலவில்லா இரவில் கூட
உன் துளி சுடர் கொண்டு வானம் பார்த்தேன்..
உனக்கு எதிரான வாசகங்களை
எண்ணி நிதம் நகைத்தேன்..

அன்று..
திரி இல்லா பட்டாசு நான் உன்னை என்னுல் ஏற்றி நானும் பற்றி கொண்டேன் ..

இன்று ..
சுவாச குழாய் வலிக்கிறது..
இதயம் கனக்கிறது..
உன்னில் பற்றிய நெருப்பு இன்று நுரையீரலில் சுடுகிறது..
நான் கண்டு நகைத்த வரிகள் இன்று என்னை கண்டு சிரிக்கிறது..
நிலவின் ஒளி பட்டு இன்று வானம் கூட கருக்கிறது..
நீயெ துயர விருந்தாய்..
தனிமை கொழுந்தாய்..
நிற்க்கிறாய்..
பட்டாசாய் வெடிக்கும் நிலையில் உணர்கிறேன்...
நிதம் நீயே என்னை கொன்றாய்..
நிதம் உணவாய் என்னை தின்றாய்...