Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Tuesday, May 8, 2018

கவலை மாய்க்கும்

கண்ணே துளிர்க்காதே
கவலை மாய்த்திடும்...
நெஞ்சே பதராதே..
காலம் ஜெய்த்திடும்...

கண்ணீர் கொண்ட கண்கள் என்றும் தீயை சுமக்காது..
பதற்றம் கொண்ட நெஞ்சில்
என்றும் உறுதி நிலைக்காது...

தேகம் முதலில் தேரட்டும்...
மனம் உறுதியாய் மாறட்டும்...
வெற்றி என்ன பெரிய இலக்கு...
வெற்றியை தாண்டியும் வாழ்க்கை இருக்கு...

கண்ணே துளிர்க்காதே
கவலை மாய்த்திடும்...
நெஞ்சே பதராதே..
காலம் ஜெய்த்திடும்

உன்னுள்  நீ கேட்க ஊரான் செவி வேண்டாம்..
உன்னை நீ பார்க்க உலகம் விடிய வேண்டாம்...
பிறர் சொல் கவனிக்க நீ வாழவே வேண்டாம்..

உன் இதிகாசம் அதை நீ எழுதிடு..
ராமனோ ராவணனோ நீயே தேர்ந்தெடு...
புல்லும் விருட்சம் அறுக்கும் அதை நீ நம்பிடு..

கண்ணே துளிர்க்காதே
கவலை மாய்த்திடும்...
நெஞ்சே பதராதே..
காலம் ஜெய்த்திடும்