Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Wednesday, September 28, 2016

முதல் முத்தம்

வான் கொண்ட மேகமும் சற்றே நனைந்து போகும்..
உந்தன் கார்கூந்தல் கொண்ட சாரலில்...

அடி அண்ட கோளங்களும் சற்றே குழம்பிப் போகும்..
மயில் விழி கொண்ட உன் கண்களில்...

ஆதவன் கதிரும் அந்தம் குளிரும்..
உந்தன் நாசி உதிர்த்த ஜுவாலை மூச்சினில்...

உன் இதழோடு என்னை நீ இறுக்கி கொன்றாய்...
எந்தன் உயிரும் மெல்ல அதன் இடம் மாறியது..

இனி வெறும் கூடு தூக்கி வாழப்போகிறேன்..
அதனாலோ என்னவோ வெறுக்கிறேன் உன் முதல் முத்ததை...

ஆதி பிரியாமல் அண்டம் அதிராமல் கடலும் புரலாமல்..
இரு தேகம் மட்டும் உணர்ந்தது ஒரு மாய பிரளயத்தை...

கற்கள் உரசித்தான் தீப்பொறி பிறக்குமென விஞ்ஞானம் சென்னதடி...
உன் தேகமும் கற்சிலையென ஒரு கலக்கம் தோணுத்தடி..

பிறவி பலன் முழுதும் பெற்றேன் நம் முதல் முத்தத்தில்...
மறுப் பிறவியின் அர்த்தம் காட்டிட்டு ஒரு புது முத்தத்தில்...

Monday, September 19, 2016

பேருந்தே நிற்காதே!!

பேருந்தே நிற்காதே...
என்னவள் இறங்கிடுவாள்..
பேருந்தே நிற்காதே..
என்னவள் மறைந்திடுவாள்...

அவள் சூடிய முல்லைக்கு முன்பே
என் உள்ளம் வாடிடும்.. அதனால்.
பேருந்தே நிற்காதே...
அவள் கால் கொலுசு போல்
என் ஆண்மை  கதறிடும்.. அதனால்..
பேருந்தே நிற்காதே...

யுவதி அவள் சிரிப்பு என் ஆயுளை குடித்து முடிக்கும் அதுவரை..
பேருந்தே நிற்காதே..
குமரி இமை இரண்டும் என் ஜீவன் பார்த்தே தேயும் அதுவரை..
பேருந்தே நிற்காதே...

ஆடி செல்லும் உன்னை தன் நடை கொண்டு சாய்ப்பாள் .. அதற்காக..
பேருந்தே நிற்காதே..
சுடர் விழி வாங்கி பிறந்தவள் இவள் உன்னை பார்ப்பாள்.. அதற்க்காக..
பேருந்தே நிற்காதே...

பேருந்தே நிற்காதே
என்னவள் இறங்கிடுவாள்..
பேருந்தே நிற்காதே..
என்னவள் மறைத்திடுவாள்..