மனிதம் தொலைத்து...
மதம் பேணவோ...
கருணை தொலைத்து...
குருணை பேணவோ...
பொருள் தொலைத்து..
அருள் பேணவோ..
மதி தொலைத்து..
விதி பேணவோ...
ஒற்றுமை தொலைத்து..
பற்றுமை பேணவோ...
நித்தம் தொலைத்து தொலைத்து
நிலைத்தது ஏதுமில்லை...
சித்தம் சிதைத்து சிதைத்து..
சத்தியம் கூடவில்லை...
நம்மை காக்கும் இறைவனை
நாம் காக்க இயலுமோ...
உண்மை மறக்கும் மனிதனை
சிவம் காக்க இயலுமோ...
கடலே ஆகினும் தாகம்
தணிக்க முடியுமோ..
மதமே ஆகினும் மனிதம்
மறக்க முடியுமோ...
கூரையின் வடிவம் ஏதாகினால்
என்ன?
உள்ளிருக்கும் இறைவன் நாடுவது
அன்பைத்தானே!!
அன்பாய் தழுவி,
ஒன்றாய் கூடி,
சுயநலம் அற்று,
பிறர்நலம் பேணி,
கரம் சேர்த்து தொழுதால்
அன்பால் குழையும் சிவனே!!!!