Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Monday, July 18, 2016

ஒரு தந்தையின் கதை

நான் பெற்ற அதிசயமே
எங்கள் கலவியின் ரகசியமே
என் கிறுக்கலில் முளைத்த ஓவியமே
என்னவள் சுமந்த காவியமே..

என் மகளே.. என் சேயே.. மறு தாயே..
இனி நிதம் உன் உச்சி முகர்ந்திடுவேன்
பொழுதும் என் மார்பில் சுமந்திடுவேன்
வாழ்வின் மொத்தம் உன் நலம் காண இசைந்திடுவேன்..

அப்பா என்று மழை கொஞ்சி அழைப்பாயோ..
எச்சில் நனைத்து கன்னத்தில் முத்தம் பதிப்பாயோ..
இல்லை அம்மா மகளாய் இருப்பாயோ..
அரை விரல் மடித்து என்னை சீண்டி பழிப்பாயோ..

சிறு மிட்டாயில் சிரிப்பாய் எனில்
கடல் உப்பையும் சக்கரையாய் மாற்றிடுவேன்
துளி அதட்டலில் கண் சிவப்பாய் எனில்
தமிழ் மொழியின் அகராதி திறுத்திடுவேன்

ராஜா இசையில் உன்னை கண் அமர்த்திடுவேன்..
Kindle பதிவிறக்கி கதைகள் பல படித்திடுவேன்..
Ipad'ல் தமிழ் எழுத சொல்லி பழக்கிடுவேன்..
பாரதி கண்ட யுவதியாய் உன்னை வளர்த்திடுவேன்..

நான் அழுகையில் உன் மடியில் அமர்த்தி
கண் துடைத்துவிடு.. மகளே உனக்கே நான்
மகனாய் மாறிடுவேன்....