நான் செய்யும் நன்மையெல்லாம்
நீ சொன்ன பாடங்கள்...
நான் வாழும் நிமிடமெல்லாம்
நீ காட்டிய பாதைகள்...
வேதங்கள் சொல்லா விளக்கங்கள்
உன் அன்பில் அறிந்தேன்..
இறைவனில் இல்லா இன்பங்கள்
உன் கருணையில் அறிந்தேன்..
பிள்ளையே ஆகினும் தவறிழைத்தால்
நீ சகித்ததில்லை...
தொல்லையே ஆகினும் ஆழ்மனதால்
நீ வெறுத்ததில்லை..
கோவங்கள் கொண்டாலும் நீ
குணம் தொலைத்ததில்லை...
தேகமே நொந்தாலும் நீ
முகம் சுளித்ததில்லை....
காலம் இமைக்க தவறினாலும்..
காற்று மிதக்க தவறினாலும்..
நீ உன் நெறியில் தவறியதில்லை...
அன்னமிடுகையில்
அன்னபூரணி நீ...
ஆட்சிபுரிகையில்
அன்னை மீனாட்சி நீ..
அன்பு செய்கையில்
அகிலாண்டேஸ்வரி நீ.
உன் நலனில் எங்கள் நலன் நாடும்
ஒரு சுயநலவாதியாய்
வாழ்த்துகிறேன்
வாழ்க நீ வாழியவே..
வையகம் கூடி வாழியவே...
ஆழி வடியும் வரை வாழியவே....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்ன பெத்த மம்மி....