Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Tuesday, June 27, 2017

கவிப்பதிகரம்

எழுத்தெல்லாம் கவி பாடுமா...
சொல்லேன்...

கவிக்கு எழுத்து மட்டுமல்ல மொழியே தேவை இல்லை...

குயவனுக்கு களிமண்ணும்,சிற்பிக்கு கல்லும், காதலனுக்கு பாவை விழியும், பக்தனுக்கு ஆலயமணியும் நித்தம் திகட்டாது பற்பல கவி படிக்கும்...
இலக்கணத்தில் மட்டும் கவி வரைய பார்ப்பவன் கவிமூடன்..

கவிதை புகழ் கைதட்டலுக்கு இல்லை...
கவிதை காதலுக்கும் ஊதியமில்லை...
கவிதை மனம் கொய்ய மன்மத பானமும் இல்லை...
அது நம் உள்ளத்திற்கும் சிந்தனைக்கும் இடையே நடக்கும்  ஊடல்...
படைபவனுக்கு ஆற்றில் செதுக்கிய கூழாங்கல்
படிப்பவனுக்கு போதை பழக்கும் பனங்கல்..

காதல் சான்றிதழ் கவிதைக்கு தேவையில்லை...
காதலை பிடித்து நடக்க கவிக்கு மூப்பும் கூடவில்லை...
கட்டில் பிதற்றல் எல்லாம் காதல் கவியும் இல்லை...
கோபம், ஆணவம், கருனை என அனைத்தும் கவியின் பாலம் பற்றி நடக்க இயலும்..
இனியேனும் காதலுக்கும் காமத்திற்கும் மட்டுமே கன்னி அவள் கவியினை தாரைவார்த்து கொல்(ள்)லாமல் இருப்போம்..