வானம் பார்த்து நிற்கையில்..
மழை பெய்தது...
வரமல்லவோ...
தவித்து நின்ற போது..
குவளை தண்ணீர்...
வரமல்லவோ...
சுட்டுபொசுக்கும் சூரியன்..
பனைமர நிழல்...
வரமல்லவோ...
பசியில் யாசகம்...
பகிர்ந்த சோறு..
வரமல்லவோ..
தொலைந்த வாழ்க்கை..
சிறு நம்பிக்கை...
வரமல்லவோ...
வறண்ட கண்கள்..
பார்வையில் அவள்..
வரமல்லவோ...
உறைந்த உள்ளம்...
கதகதப்பான புன்னகை..
வரமல்லவோ...
வறண்ட நம்பிக்கை..
இறுதியாய் இறைவன்..
வரமல்லவோ!!!