உன் உதிரம் தொட்டு பூவுலகம் உயிர் பிறப்பை வரைந்தவள் நீ...
அந்த உயிரோவிய மைக்கா தீட்டு....
உன் உதிரம் குளித்தே இவுலகில் அந்த
ஈசனும் பிறக்கவேண்டும்...
அந்த பிறப்பின் பொருளுக்கா தீட்டு...
காதோரம் கிசுகிசுக்க அது ஒன்றும்
அசிங்கம் இல்லை...
பூவுலகம் எங்கும் நடக்கும் இயற்க்கை...
பெண்ணாய் பிறந்ததற்காக அது ஒன்றும்
சாபம் இல்லை...
மனிதம் சமைக்கும் இன்றியமையா வரம்..
மனதளவில் நோகி புழுக அது ஒன்றும்
நோய் இல்லை...
மனிதம் செழிக்க இயற்கையின் படைப்பு...
மாதவிடாய் வாழ்நாளில் பாதி காலம் சுமக்கும் பெண்ணே..
ஓய்வெடு தேவை என்றால்..
துள்ளி குதி ஆசை என்றால்...
அர்த்தம் படி புரியும் என்றால்...
அறியாமை தொலைத்திடு இயலும் என்றால்...
உடல் நலம் பேணு சுத்தம் என்றால்...
நீ உருவாக்கிய உருவாக்கிடும் உலகம் இது..
உன் உதிரம் தீட்டு என்றால்..
அதில் குளித்த பிறந்த அவன் பிறப்பும் தீட்டே..
கற்சிலைகள் உன்னுள் ஊறி பிறப்பதில்லையம்மா...
அதனாலோ கோவிலுக்கு உயர் சமைக்கும் உயிர் உதிரத்தின் பொருள் விளங்கவில்லை...