Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Friday, April 14, 2017

நிலவுக்கு நீலவண்ணம் - 2

அத்தியாயம் 1: http://subumayura93.blogspot.in/2017/01/blog-post_24.html?m=1

--அத்தியாயம் 2--

இதோ எங்களுக்கு திருமணம் ஆகி இன்றோடு 10 வருடங்கள் ஆகி விட்டது. அதற்குள் குறைந்தது ஒரு லட்சம் சண்டை போட்டு இருப்போம், எதோ என் மகள் உமையாளுக்காக இவளை இன்னும் விவாகரத்து பண்ணாமல் இருக்கிறேன், இன்றுவரை எங்களுக்குள் எதுவும் ஒற்று போனதே இல்லை பாரதியார் கவிதையும் எங்கள் மகள் உமையாளையும் தவிர ஆம் திருமணமான சில வருடம் அவளுக்காக பெரிய மீசை வைத்து இருந்தேன் பிறகு அவளை தூக்கி எரிய முடியாத சூழ்நிலையில் அவளுக்காக வளர்த்த மீசையை மட்டுமாவது கோபம் தீர எறியலாம் என மழித்து எறிந்தேன்,

இதே தினம் பத்து ஆண்டுக்கு முன் எத்தனை காதலோடு இருந்தேன் இவள் மேல், ஒரு நொடி இவளை பார்க்க மாட்டோமா என எத்தனை பொழுதுகள் ஏங்கி இருப்பேன். அனால் என்று அவள் தன் ரகசிய காதலனை என் முன்னே.., அன்றே அவளை வெட்டி கொன்றிடலாம் என்று அன்றே தோன்றியது எனக்கு ஆனால் நான்கு வயது குழந்தையாய் நின்ற என் மகள் உமையாளுக்காக இவளை இன்னும் என்னோடு சேர்த்து குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறேன், ஊர் உலகத்திற்கு இன்றும் நாங்கள் அன்யோன்ய தம்பதிகளே ஆனால் எங்கள் தனிமையில் அவள் என் உடல் உறுத்தும் உடை, செருப்பிடை பட்ட பரல் என எண்ணி காலம் கசக்க கசக்க கழித்து கொண்டு இருக்கிறேன்.

மெதுவாக நான் காரை செலுத்தி கொண்டு இருந்தேன், நாங்கள் திருமணம் செய்த கல்யாண மண்டபத்தை தாண்டி வண்டியை செலுத்துகையில் ஒரு நொடி நான் அவளுக்காக காத்திருந்த வீட்டையும் சிந்துவை முதன் முறை திருமண கோலத்தில் சந்தித்த அந்த ஜன்னலையும் அசைபோடும் மாடு போல் அந்த நாட்களை எண்ணி பார்த்து கொண்டு சென்றேன். திருமண வாழ்க்கை எவ்வளவு அழகாக சென்று கொண்டு இருந்தது எனக்கு, எல்லாம் இந்த தீபக் என் வாழ்க்கையில் வராது இருந்த வரை. திருமணம் ஆனா பெண்ணாய் இருந்தாலும் காதல் வார்த்தை பேசி பழகும் ஆண்களை எல்லாம் அடித்தே கொல்ல வேண்டும், தன் மனைவியிடம் அடுத்தவன் காதல் பேசினால் நம் மனம் தாங்குமா!! அது போல தானே அடுத்தவன் மனைவியிடம் நாம் இப்படி நடந்து கொள்கிறோமே இவளை மணந்த கணவனுக்கு எவ்வளவு துன்பம் இருக்கும் என யோசித்தானா அந்த தீபக் குமார், துரோகி!!!

வண்டியில் ஏறி மகராணி போல் அவள் எப்படி அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டே வருகிறாள்!!, இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லையே ஏன் என கேட்கலாம் என மெதுவாக ஆரம்பித்தேன் "என்ன எதுவும் பேசாம வர?", அவளோ "என்ன பேசுறது என்ன பேசினாலும் திட்டுவிங்க", நான்தான் அவளை சண்டைக்கு இழுக்கிறேன் என்பது போல அவள் சொன்ன வார்த்தைகள் என்னை சூடேற்றின, "ஆமா!! உனக்கு என் கூட பேச என்ன இருக்க போகுது அதான் தினமும் ஆபிஸ்ல தீபக் கூட பேசிடுறியே!!" என பொரிந்து தள்ளினேன், அவளிடம் இருந்து எந்த வார்த்தையும் இல்லை, மெல்ல கண்கள் சிவந்து அழ ஆரம்பித்தாள், "கொஞ்சம் வாய மூடுறியா, வண்டி ஓட்ட முடியல!!'' உடனே அவள் கைக்குட்டையை தன் முகத்தில் வைத்து சத்தத்தை தன்னோடு புதைத்து விசும்பிக்கொண்டே இருந்தாள், அவள் விசும்பல் சத்தம் என்னை மேலும் ஆத்திரமூட்டியது, சத்தமாக ரேடியோவில் பாட்டை வைத்து கத்த விட்டுக்கொண்டே என் பயணத்தை தொடர்ந்தேன். சென்னை மயிலாப்பூர் கோவில் வாசலில் வந்து வண்டியை நிறுத்தினேன் அதே வேகத்தில் என் மனைவியை நோக்கி திரும்பி இங்க அழுது ஏமாத்த யாரும் இல்ல என் அம்மாகிட்டையும் , உமையாள்கிட்டயும் உன் நாடகத்தை போட்டுடாத என வீசும்பிக்கொண்டு இருந்த அவளிடம் கூறிவிட்டு வண்டியை விட்டு இறங்கினேன். வண்டியிலே சில நொடிகள் எடுத்து தன் முதலை கண்ணீரை துடைத்து எடுத்து சிரித்தபடி காரில் இருந்து இறங்கி நடந்து சென்றால், இன்னும் இதுபோல் எப்படி நடித்து ஊரை ஏமாற்ற போகிறாளோ இந்த நாடககாரி, என என்னுள் புலம்பிகொண்டே வண்டியை லாக் செய்துவிட்டு அவளை பின் தொடர்ந்தேன்.

இதோ என் அம்மாவுடன் என் ஆசை மகள் உமையாள் சிகப்பு தாவணி உடுத்தி பம்பரமாய் சுழன்று விளையாடி சிரித்து கொண்டு இருந்தாள், என்னை பார்க்கவும், அப்பா என சொல்லி ஓடிவந்து என்னை கட்டி  அனைத்துக்கொண்டாள், என் மகளின் தலையை வருடிகொண்டே.. அவள் தலையில் முத்தம் கொடுத்தேன் 

இதோ என் இளவரசி.. அன்றைய அழகிய நாட்களின் ஒரே எஞ்சிய அடையாளம்!! இவள் என் மகள்.. என் இருட்டிய வாழ்க்கையில் ஒரே ஒளி

அப்பா வரப்போ பாட்டி வாங்கி கொடுத்தாங்க என தன் கையில் வைத்திருந்த காற்று போன பலூன் ஒன்றை வைத்து இருந்தால், என்ன குட்டி!! இதுல காத்தே இல்ல என வினவ இதை ஊதிக் கொடுப்பா என கொஞ்சி மெல்ல புன்னைகை செய்தபடி ஆர்வமாய் பார்த்த அவள் கண்களை பார்த்தபடியே மெல்ல பலூன் ஊதி கொண்டு இருந்தேன், போதும் போதும் என்ன சொல்லி புடுங்கி தன் அம்மாவிடம் நீட்டி நீ இதை ஊது என்றால், அந்த ஆட்டகாரியோ என்னை நோக்கி ஏளனமாய் புன்னைகைத்த படி அப்பாவே ஊதட்டும் பாவம்ல அப்பா என அந்த சிறுக்கி நடித்தால், நான் ஆத்திரம் கொள்ளாது என் கவனத்தை என் தாய் மீது வீசினேன், என் அப்பா ஒரு விபத்தில் இறந்து விட ஒரு இரும்பு மனுஷியாய் தன் தனிமை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அனால் என்னை கட்டிய வேசியோ.. ச்சே.. என எண்ணிய படியே மீண்டும் இந்த உலகம் திரும்ப சிந்து அந்த பலூனை ஊதி முடித்து இருந்துந்தால், இதைத்தான் இன்னைக்கு கட்டி புடிச்சு தூங்க போறேன் என்று சிந்துவின் கன்னத்தில் என் மகள் முத்தம் பதித்தால், உடனே என் அம்மா பாருடா உமையாள் எப்படி கஷ்ட படுறானு இந்த வயசுல அவளுக்கு முக்கியம் உங்க அன்பு தான் பணம் இல்லை இப்டி புருஷனும் பொண்டாட்டியும் ஓடி ஓடி சம்பதிக்குறது யாருக்கு என வழக்கம் போல் வினவ என் மனைவியோ உமையாளை இழுத்துக் கொண்டு கோவிலுக்கு உள்ளே போனாள், 

நானோ "அம்மா தினமும் செங்கல்பட்டுல இருந்து மயிலை வரது எல்லாம் கஷ்டம், அதுவும் இல்லாம நாங்க எப்போ வேளைக்கு போறோம் எப்போ வறோம்னு எங்களுக்கே தெரியல அவள தனிமையில கிடப்பா, உன் கூட இருந்தா என் ஆச மக உன்ன போல ஒரு தைரியமான பொண்ணா இருப்பா" என சொல்லி முடிக்கும் போதே ஏன் என் மருமக தைரியத்துக்கு என்ன குறைச்சல், சரி இன்னும் ஆறு மாசத்துல annual leave வரும் அப்போ வேற school பாத்து அவள உன் கூட வச்சுகொ அவ்ளோதான் என கச்சிதமாய் சொல்லிவிட்டு கோவிலுக்கு உள்ளே சென்றால் நானும் சரி இன்னும் ஆறு மாசம் கழிச்சு வேற காரணம் கிடைக்காமலா போகும்!! இப்பிடி ஒரு குணம் கேட்ட பொம்பளை கையில வளருறத வீட என் மக இப்டி அப்பா அம்மாவ பாக்காம வாழ்ந்திடலாம் என எண்ணிக்கொண்டே என் அம்மாவை பின்தொடர்ந்தேன், உள்ளே என் மகள் சிந்துவின் இடுப்பில் அமர்ந்து சுவாமி அபிசேகம் பார்த்து கொண்டு இருந்தனர் அப்பபோ என் மகள் சிந்துவை கொஞ்சுவது சிரித்து பேசுவதும் சற்றே எனக்கு எரிச்சலை உண்டாக்க 'எய் உமையாள் இறங்கி இங்க வா பேசாம சாமி கும்பிடு என அதட்ட சற்றே முகம் வாடிய படி அம்மாவின் இடுப்பில் இருந்து மெல்ல சறுக்கி கொண்டு அவள் காலை அணைத்த படி நின்றாள், இந்த சனியன் வந்தா எப்டி தான் என் மகள மயக்குத்தொ.., ச்சை!! என எண்ணிக்கொண்டே கடவுள் மெல் கவனம் செலுத்த அபிசேகம் முடிந்து ஒரு மாலையை கொண்டு வந்து ஐயர் எங்கள் இருவர் தோளிலும் ஒருசேர போட என் அம்மாவை முறைத்தேன் ஒரு நொடி என் அம்மா ஆசைக்காக நின்றுவிட்டு நெருப்பு சுடு பட்ட பூனை போல அவள் தேகத்தில் இருந்து விலகி ஓடினேன்.. எல்லா வேலையும் முடித்து வெளியில் வரும் போது என் அம்மா அடேய் என்ன ஒரு பொட்ட புள்ளை போதும்னு நினைச்சியா.. எனக்கு பேரன் வேணும் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லி அழுத்துடேன் நீயாச்சும் கவனம் வச்சுகொ அடுத்த கல்யாண நாள் நீங்க பேரனை கைல வச்சுகிட்டு கொண்டாடனும் புரியுதா என அதட்ட வெறும் புன்னகையை பதிலாய் கொடுத்துவிட்டு காரை கிளப்பினேன், என் மகளுக்கு ஜன்னல் வழியாய் கையசைத்த படியே காரை கோவிலை விட்டு வெளியே செலுத்தினேன், ரேடியோவில் சிவராத்திரி இனி துக்கமெது என கமல் பாடல் காமம் தோய்த்து ஓட நானோ கட்டிலில் கை கால் உதற அமைதியாய் புது மாப்பிள்ளைக்கு உண்டான காம வெட்கம் பொத்திக்கொண்டு என் அவளுக்காக அமர்ந்து இருந்தேன், அந்த பாடல்!! கமல் அந்த பெயர் தெரியாத நடிகையோடு எப்படி நெருங்கி காமம் கொஞ்சி இருப்பார். ச்ச முதல் ராத்திரியில் கேட்க்க வேண்டிய பாடல் தான் அது, அவள் வரட்டும் நாமளும்.இந்த பாடலின் அர்த்தத்தை இன்று புரிந்து கொள்ள வேண்டியதுதான்!!

அத்தியாயம் 3ல் தொடரும்