அடி ஆதி பெண்ணே..
அடியே குல பெண்ணே...
சலங்கையில் சங்கிலிய கட்டிக்கிட்டு
அடுபங்கரை அமர்ந்தே பெண்ணே.
என் கனகாம்பரமே..
ஆண்மை என்பான்..
வலிமை என்பான்...
அத்தனையும் கட்டுக்கதை நம்பாதே அடி கனகாம்பரமே...
பெண்ணியம் என்றால் இதுவல்ல என்பான்...
தனக்கு பிடித்ததே கலாச்சாரம் என்பான்.. இவனை நம்பாதே
அடி கனகாம்பரமே...
கற்பு என்பான்... கடவுள் என்பான்..
நதியும் என்பான் நிலமும் என்பான்.. இந்த புகழ்ச்சியில் மயங்கதே அடி கனகாம்பரமே..
அடிப்பேன் என்பான் உதைப்பேன் என்பான்.. ஆசிட் என்பான்.. தற்கொலை என்பான்.. கலங்காதே அடி கனகாம்பரமே...
மோகினி என்பான்.. பரத்தை என்பான்.. வேசி என்பான்.. தாசி என்பான்.. துயராதே அடி கனகாம்பரமே..
கவர்ச்சி என்பான்.. காமம் என்பான்.. அத்தனைக்கும் அவள் தான் காரணம் என்பான்.. பதராதே அடி கனகாம்பரமே...
பருவம் என்பான்.. தீட்டு என்பான்..
மலடி என்பான்.. அடிமை என்பான்..
குழம்பாதே அடி கனகாம்பரமே...
அச்சம் என்பான் மடமை என்பான்..
நாணம் என்பான் குணம் என்பான்.. சொல்லாமல் உன்னை முட்டாள் என்பான்... சகிக்காதே அடி
கனகாம்பரமே...