கருநீலத்தில் பொன்மஞ்சள் பூசியத்தை போல் இருந்தது வானம், விடியற்காலை 4.30மணிக்கு மேல் இருக்கும், வாட்டர் ஹிட்டர்லில் வெந்நீர் காயும்வரை வாயில் நுரை தள்ள பல்துலக்கி கொண்டே கல்யாண கனவில் மிதந்து கொண்டு இருந்தேன்... இன்னேரம் நாளை எனக்கு முதலிரவே முடிந்திருக்கும் என எண்ணிய நொடி என்னையும் அறியாமல் வந்த பெருமூச்சு பகல்நேர பணியையும் சற்று கதகதபாக்கி இருக்கும். வெந்நீர் குளியல், புத்தாடை, விடியற்காலை பரபரப்பு எல்லாம் என் சிறுவயது தீபாவளி கொண்டாட்டத்தை நினைவூட்டியது. மெல்ல அம்மாவிடம் சென்று ஆண்களுக்கே உரித்தான அரை நாணத்துடன் 'அம்மா ஓகேவா?' என வினவினேன். இருந்த வேலை படபப்பிலும் ஒரு நொடி பார்த்த அவள் ஏன்டா!! மாப்பிள்ளை அதுவுமா ஏன் இவ்ளோ பெரிய மீசை என இன்னும் தன் மகன் குழந்தை என எண்ணி திட்டிய விதத்தை கிரகித்து கொண்டே சொன்னேன்.. அம்மா!! போமா மீசையெல்லாம் எடுக்க முடியாது.. உடனே பதிலுக்கு "மம்க்கும், இனி நான் சொன்னா எங்க கேக்க போற வரவ குமட்டுல குத்தி சொல்லுவா அப்போ மண்டை ஆட்டுவ" என சொல்லி தன் வேளையில் மீண்டும் லயித்தால். நானோ அடுத்து என்ன செய்வது என்ன தெரியாமல் நிற்க. டேய் வேலைக்காரி அக்காகிட்ட காபி வாங்கி குடிச்சிட்டு மண்டபத்துக்கு கிளம்பு என அப்பாவின் அதட்டல். மரகதம் அக்காவின் காபியை மெல்ல உரிஞ்சிகொண்டே என் அலைபேசியில் செய்தி படிக்க ஆரம்பித்தேன்.. இல்லை!! படிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன், ஒவ்வொரு வார்த்தை மத்தியிலும் சிந்துவின் நினைவே ஓடிக்கொண்டு இருந்தது.. குடுத்த காபியை குடித்துவிட்டு வேகமாக கிழே நிற்க்கும் காரில் ஏறி அமர்ந்தேன்.. டிரைவர் காரை ஓட்ட நான் மீண்டும் சிந்துவை நோக்கி என் எண்ணங்களை ஓடவிட்டேன். அவள் 'சிந்து மார்க்கண்டேயன்', விரைவில் 'சிந்து நிர்மலன்' ஆக போகிறாள், அவளை பல முறை என் அலுவலகத்தில் பார்த்து இருக்கிறேன் அப்பொழுது அழகிய நல்ல பெண் என்கிற எண்ணத்தை தவிர வேறுஎண்ணங்கள் இல்லை இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதுண்டு அனால் இவளையே மணப்பேன் என கனவிலும் எண்ணவில்லை. கார் ஓர் இடத்தில் நின்றது திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள வீடு அது, அங்கே என்னை தங்க வைத்து விட்டார்கள், மாப்பிள்ளை அழைப்பு முடிந்துதான் அவளை பார்க்க வேண்டுமாம்!! கடிகாரத்தை கடிந்துக்கொண்டே காத்திருந்தேன், அப்பொழுது கல்யாண மண்டபத்தின் மாடி ஜன்னலில் இருந்து ஒரு அழகிய உருவம் என்னை பார்த்தது.. ஆம்!! அது அவள்தான்.. தங்கத்தை இழைத்தது போல ஒரு புடவை, அதில் தேவதை போல் மின்னினால் அவள், மருதாணி கரங்களால் மீசையை முறுக்குவது போல் பாவனை செய்தால் நான் உணர்ப்பால் உணர்ந்து என் மீசை சற்றே முருக்கிவிட்டேன்.. காதலாய் சிரித்து அதை ஆமோதித்தாள், நிச்சயம் ஆன நாள்முதல் தினம் அலைபேசி உரையாடலில் நாங்கள் இருவரும் பேசி அதிகம் புலங்காகித்தது என் மீசை மற்றும் பாரதியாரின் கண்ணன் பாட்டுதான்..
மெல்ல கதிரவன் வான் நோக்கி எறிச்செல்ல கட கட வென மாப்பிளை அழைப்பு முடிந்ததது ஊர் முழுக்க மென்னடை பழகவிட்டார்கள் என்னை, போவோர் வருவோர்கள் அனைவரும் பார்க்கும் பொருட்காட்சி பொம்மை போல் காட்சியளிப்பதாய் தோன்றியது எனக்கு. திருமண மண்டப நுழைவாசலில் என்னை வரவேற்க அவள் நின்றிருந்தாள், அவள் சூடிய வைரங்கள் சற்றே மங்கின அவள் நாண புன்னகையில். நொடி நேரம் தவறாது என் முன் ஒரு தடுப்பினை பிடித்தனர் என் உறவினர்கள் மேலும் சிறுவர்கள் வந்து தடுப்பின்மேல் பூ எரிய. எதிரில் என் எதிர்கால துணை நின்றும் அவளை காண இயலாததை என்னை தடுப்பின் வழி சிதறிய அவள் பாதங்களை பார்த்தபடி நின்றேன். மெல்ல அவள் பாதம் வேறு திசையில் பயணிக்க என் முன் தாங்கி பிடித்த திரை விலகியது... நேரத்தை என் மௌனத்தால் கொன்று குவித்தப்படி அமர்ந்து இருந்தேன். தலையில் சூடிய செயற்கை தலைப்பாகை வேறு சற்றே உறுத்தியது, அங்கே அவள் சபையில் அவள் சித்தி சொல்லும்படி கைகளை குவித்து ஒரு தேங்காயை தாங்கி நின்றாள். அனைவரும் காலை சிற்றுண்டி சாப்பிட சென்றுவிட என்னை சுற்றி சிறுவர்கள் மட்டுமே அமர்ந்து இருந்தார்கள்.
என்னவள் சற்றே பதட்டத்துடன் செய்யும் சம்பிரதாயங்களை பார்த்து ரசித்த படி அமர்ந்து இருந்தேன். அவள் ஒரு முறை அலைபேசியில் கூறியது நினைவுக்கு வந்தது "எதுக்கு செய்யுறொம்னு தெரியாம ஏன் சடங்குன்னு ஆட்டுக்குட்டி போல செய்யணும்" அப்படி வினவியவள் இப்பொழுது சித்தியின் அதடலுக்கு அடங்கி பிடி என்றால் பிடிக்கிறாள் வை என்றால் வைக்கிறாள். அவளின் நிலை எண்ணி சற்றே நகைக்கத்தான் தோன்றியது எனக்கு.
பின்பு தம்பத்தியராய் உலாவி ஆசி சம்பாதித்தோம்..
மதிய உணவும் கல்யாண பரிசு வழங்குதலும் ஒரே நேரம் நடை பெற கல்யாண களைப்பை ஒருசேர அனுபவித்தோம்,