Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Tuesday, January 24, 2017

நிலவுக்கு நீலவண்ணம்

-- அத்தியாயம் 1 --
கருநீலத்தில் பொன்மஞ்சள் பூசியத்தை போல் இருந்தது வானம், விடியற்காலை 4.30மணிக்கு மேல் இருக்கும், வாட்டர் ஹிட்டர்லில் வெந்நீர் காயும்வரை வாயில் நுரை தள்ள பல்துலக்கி கொண்டே கல்யாண கனவில் மிதந்து கொண்டு இருந்தேன்... இன்னேரம் நாளை எனக்கு முதலிரவே முடிந்திருக்கும் என எண்ணிய நொடி என்னையும் அறியாமல் வந்த பெருமூச்சு பகல்நேர பணியையும் சற்று கதகதபாக்கி இருக்கும். வெந்நீர் குளியல், புத்தாடை, விடியற்காலை பரபரப்பு எல்லாம் என் சிறுவயது தீபாவளி கொண்டாட்டத்தை நினைவூட்டியது. மெல்ல அம்மாவிடம் சென்று ஆண்களுக்கே உரித்தான அரை நாணத்துடன் 'அம்மா ஓகேவா?' என வினவினேன். இருந்த வேலை படபப்பிலும் ஒரு நொடி பார்த்த அவள் ஏன்டா!! மாப்பிள்ளை அதுவுமா ஏன் இவ்ளோ பெரிய மீசை என இன்னும் தன் மகன் குழந்தை என எண்ணி திட்டிய விதத்தை கிரகித்து கொண்டே சொன்னேன்.. அம்மா!! போமா மீசையெல்லாம் எடுக்க முடியாது.. உடனே பதிலுக்கு "மம்க்கும், இனி நான் சொன்னா எங்க கேக்க போற வரவ குமட்டுல குத்தி சொல்லுவா அப்போ மண்டை ஆட்டுவ" என சொல்லி தன் வேளையில் மீண்டும் லயித்தால். நானோ அடுத்து என்ன செய்வது என்ன தெரியாமல் நிற்க. டேய் வேலைக்காரி அக்காகிட்ட காபி வாங்கி குடிச்சிட்டு மண்டபத்துக்கு கிளம்பு என அப்பாவின் அதட்டல். மரகதம் அக்காவின் காபியை மெல்ல உரிஞ்சிகொண்டே என் அலைபேசியில் செய்தி படிக்க ஆரம்பித்தேன்.. இல்லை!! படிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன், ஒவ்வொரு வார்த்தை மத்தியிலும் சிந்துவின் நினைவே ஓடிக்கொண்டு இருந்தது.. குடுத்த காபியை குடித்துவிட்டு வேகமாக கிழே நிற்க்கும் காரில் ஏறி அமர்ந்தேன்.. டிரைவர் காரை ஓட்ட நான் மீண்டும் சிந்துவை நோக்கி என் எண்ணங்களை ஓடவிட்டேன். அவள் 'சிந்து மார்க்கண்டேயன்', விரைவில் 'சிந்து நிர்மலன்' ஆக போகிறாள், அவளை பல முறை என் அலுவலகத்தில் பார்த்து இருக்கிறேன் அப்பொழுது அழகிய நல்ல பெண் என்கிற எண்ணத்தை தவிர வேறுஎண்ணங்கள் இல்லை இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதுண்டு அனால் இவளையே மணப்பேன் என கனவிலும் எண்ணவில்லை. கார் ஓர் இடத்தில் நின்றது திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள வீடு அது, அங்கே என்னை தங்க வைத்து விட்டார்கள், மாப்பிள்ளை அழைப்பு முடிந்துதான் அவளை பார்க்க வேண்டுமாம்!! கடிகாரத்தை கடிந்துக்கொண்டே காத்திருந்தேன், அப்பொழுது கல்யாண மண்டபத்தின் மாடி ஜன்னலில் இருந்து ஒரு அழகிய உருவம் என்னை பார்த்தது.. ஆம்!! அது அவள்தான்.. தங்கத்தை இழைத்தது போல ஒரு புடவை, அதில் தேவதை போல் மின்னினால் அவள், மருதாணி கரங்களால் மீசையை முறுக்குவது போல் பாவனை செய்தால் நான் உணர்ப்பால் உணர்ந்து என் மீசை சற்றே முருக்கிவிட்டேன்.. காதலாய் சிரித்து அதை ஆமோதித்தாள், நிச்சயம் ஆன நாள்முதல் தினம் அலைபேசி உரையாடலில் நாங்கள் இருவரும் பேசி அதிகம் புலங்காகித்தது என் மீசை மற்றும் பாரதியாரின் கண்ணன் பாட்டுதான்..
மெல்ல கதிரவன் வான் நோக்கி எறிச்செல்ல கட கட வென மாப்பிளை அழைப்பு முடிந்ததது ஊர் முழுக்க மென்னடை பழகவிட்டார்கள் என்னை, போவோர் வருவோர்கள் அனைவரும் பார்க்கும் பொருட்காட்சி பொம்மை போல் காட்சியளிப்பதாய் தோன்றியது எனக்கு. திருமண மண்டப நுழைவாசலில் என்னை வரவேற்க அவள் நின்றிருந்தாள், அவள் சூடிய வைரங்கள் சற்றே மங்கின அவள் நாண புன்னகையில். நொடி நேரம் தவறாது என் முன் ஒரு தடுப்பினை பிடித்தனர் என் உறவினர்கள் மேலும் சிறுவர்கள் வந்து தடுப்பின்மேல் பூ எரிய. எதிரில் என் எதிர்கால துணை நின்றும் அவளை காண இயலாததை என்னை தடுப்பின் வழி சிதறிய அவள் பாதங்களை பார்த்தபடி நின்றேன். மெல்ல அவள் பாதம் வேறு திசையில் பயணிக்க என் முன் தாங்கி பிடித்த திரை விலகியது... நேரத்தை என் மௌனத்தால் கொன்று குவித்தப்படி அமர்ந்து இருந்தேன். தலையில் சூடிய செயற்கை தலைப்பாகை வேறு சற்றே உறுத்தியது, அங்கே அவள் சபையில் அவள் சித்தி சொல்லும்படி கைகளை குவித்து ஒரு தேங்காயை தாங்கி நின்றாள். அனைவரும் காலை சிற்றுண்டி சாப்பிட சென்றுவிட என்னை சுற்றி சிறுவர்கள் மட்டுமே அமர்ந்து இருந்தார்கள்.
என்னவள் சற்றே பதட்டத்துடன் செய்யும் சம்பிரதாயங்களை பார்த்து ரசித்த படி அமர்ந்து இருந்தேன். அவள் ஒரு முறை அலைபேசியில் கூறியது நினைவுக்கு வந்தது "எதுக்கு செய்யுறொம்னு தெரியாம ஏன் சடங்குன்னு ஆட்டுக்குட்டி போல செய்யணும்" அப்படி வினவியவள் இப்பொழுது சித்தியின் அதடலுக்கு அடங்கி பிடி என்றால் பிடிக்கிறாள் வை என்றால் வைக்கிறாள். அவளின் நிலை எண்ணி சற்றே நகைக்கத்தான் தோன்றியது எனக்கு.
அதோ இதோ என இழுத்த நொடிகள் இப்பொழுது வந்து விட்டது, என் எதிரில் இருந்த கால் அடி உயர மனைபலகையில் அவள் பெரும் படைசூல வந்து ஏறி நின்றாள் என் விழிகளில் இருந்து ஒருஅடி தொலைவில் தான் இருந்தாள் இருப்பின்னும் அவளின் கண்களை நிதானித்து என்னால் காண இயலா வண்ணம் அவ்வளவு நெரிசல் மற்றும் கேளிக்கைகள் சூழ்ந்து இருந்தன.. சுற்றி நின்ற தாய்மாமாக்கள் ஒவ்வொன்றாய் சொல்ல மாலை மாற்றி மாங்கல்யம் பூட்டியாயிற்று.. இந்தோ இந்த நொடி என்னவள் இனி என்றுமே என் ஆசைக்காதலி என் அன்பு மனைவியாய் மாறிவிட்டால்..
பின்பு தம்பத்தியராய் உலாவி ஆசி சம்பாதித்தோம்..
மதிய உணவும் கல்யாண பரிசு வழங்குதலும் ஒரே நேரம் நடை பெற கல்யாண களைப்பை ஒருசேர அனுபவித்தோம்,
ஒருவழியாய் சற்றே தனித்து நிதானித்து கொள்ள நேரம் கிடைத்தது..  சாயங்காலம் மணி ஒரு நான்கு இருக்கும்.. மண்டபத்தில் இருந்து கிளம்பினோம்.. கார் மெல்ல அதன் வேகத்தில் நகர நான் சற்றே தயங்கி அவள் கரம் பற்றினேன். அப்போது எதிரில் ஒரு சிகப்பு ஹூண்டாய் சிட்டி கார் வந்து நின்றது.
என்னை அறியாமல் என் மனம் படபடத்தது சற்றே வேர்த்தும் போய் விட்டேன் ஜன்னல் திறந்திருந்தும் எனக்கு ஏனோ சுவாசிக்க காற்று போதவில்லை என ஒரு பிரமை, மீண்டும் நிதானித்து கொண்டு உற்று நோக்கினேன் ஆம் அது நான் தான் எதிரில் உள்ள வண்டியில் நானே ஒரு நாற்பதை ஒத்த வயதில் அமர்ந்திருக்கிறேன் அருகில் என் அருமை மனைவி சிந்து முப்பது மத்தி வயதில் உள்ள ஒரு பெண் போல் எதிரில் உள்ள காரில் அமர்ந்து இருக்கிறாள் என்னுடன்.. மீண்டும் மண்டைக்குள் இடியென ஒரு சப்தம் நிற்காத குழப்பம்


அத்தியாயம் 2: http://subumayura93.blogspot.in/2017/04/blog-post.html?m=1

Friday, January 6, 2017

என்னுள் சிந்தும் ஒருதலை காதல்

சிந்தும்... சிதறும்...
தத்தும்... ததும்பும்..
எந்தன் காதல்...
அவள் சிந்தூர செவ்விதல் மத்தியில்...

கெஞ்சும்..  கதறும்...
கொஞ்சும்.. குலையும்...
எந்தன் இதயம்...
அவள் கயல்விழி கடைக்கண்
பார்வையில்...

சுண்டும்.. சுருங்கும்...
மருளும்... ஒடுங்கும்...
எந்தன் ஜீவன்...
அவளின் தேர்ந்த கார்குழல்
சுருள்களில்...

தெளிவான புத்தி கொண்டு
இருந்தேன் அன்று...
உன் அளவான இடையால் புத்திகேட்டு திரிகிறேன் இன்று...
புத்தனை போல் சாந்தம் கொண்டு
சிரித்தேன் அன்று...
சிங்கார நடையாள் உன் ஆசையில் புத்தம் துறந்தேன் இன்று...

நெட்டி முறிக்கும் உந்தன்
குட்டி விரலின் ஒரு சீண்டல் பொதும்...
முந்நூறு ஆண்டுகள் வாழ்திடுவேன்..
கொட்டி சிரிக்கும் உந்தன்
அலர் புன்னகை என்னிடம் சிந்திடு போதும்...
நிலவையும் நீராட்டி விற்றிடுவேன்...

மலரும் மயங்கியது.. ஆடையும் நானியது... மையும் சிவந்தது...
காலமும் உறைந்தது..

மலரும் மயங்கியது..
உன் மயிரிதழ் அது தீண்டுகையில்...
ஆடையும் நானியது..
உன் மேனியதில் நீ பூட்டுகயில்...
மையும் அது சிவந்தது..
உன் கண்மணி அதனில் பூசுகையில்...
காலமும் உறைந்தது..
உன்தன் கை கடிகாரம் நீ பார்க்கையில்...

எதுவும் நிலை இழந்து காதல் கொள்ளும் அத்துணை அழகியடி நீ
பிரமனும் சற்றே தடுமாறி இருப்பான் படைக்கயில் அப்படி ஓர் அழகியடி.. நீ

மன்மத மதுவே... காதல் ரதியே. 
கயவன் கிளியே... பாறை மயிலே..

மன்மத மதுவே...
பார்வை எனும் பாணம் தொடுக்கிறாய்...
காதல் ரதியே..
ஆண்மகன் இதயம் துளைக்கிறாய்
கயவன் கிளியே...
மென்காமம் என்னுள் தினிக்கிறாய்
பாறை மயிலே..
விரைவாக வானில் சிறகடிக்கிறாய்

இந்த பிறவில் தவம் கொள்கிறேன்.. மீண்டும் ஒரு பிறவி வேண்டும் என்று...
மறு பிறவியில் பயனாய் உன்னை
கொள்வேன்.. என் பிறப்பின் அர்த்தம் நீ என்று...

Monday, January 2, 2017

எம் தெய்வத்தின் மீது வழக்கு

உயிர் அமுதூட்டிய...
உயர்ந்த பசுவின் கண்ணீர் துடைத்திட தன் மகன் மேல் தேர்க்கால் உழுதிட்டான் எம் அரசன்....
பயிர் நெல் கூட்டிட...
கட்டைவிரல்  களத்தில் ஊன்றி
செந்நீர் நிலத்தில் உயர்வென
ஏர்க்கால் உழுதிட்டான் எம்
உழவன்...
அவன் புகழ் பாடிட என்றேனும்
நான் உன்னை வதைத்திட்டேனோ

ஊன் இளைத்து...
உயிர் உருக்கி...
கடன் எடுத்து...
மச்சு இறக்கி...
உன் தாய் சுமந்து போக உன்னை சுகம் என எண்ணி என் மார்சுமந்த 
நான் உன்னை வதைத்திட்டேனோ

தோல் மிளிர... விழி சுடர...
திமில் அதிர... நிலம் அலற...
என் வீட்டில் செல்லமாய்...
என் தெருவில் சொந்தமாய்...
என் ஊரில் தெய்வமாய்...
என் கீர்த்தி பாடிடும்..
என் புகழ் கன்றே என்றேனும்
நான் உன்னை வதைத்திட்டேனோ

ஏனைய பசுவின் காதலானாய்...
திமில் ஏறிய காவலனாய்...
உடன் பிறவா சகோதரனாய்..
வளர்ந்தும் என் மீது உரசும் எம் குழந்தையாய்... எத்தனை
மாற்றங்கள் சுமந்து என் முன் நின்றாய்... அடேய் நீயே சொல்..
நான் உன்னை வதைத்திட்டேனோ

என்னை தவிர எவனும் உன்னை
கட்டி அணைக்க இயலாது என
எண்ணியது தான் உன் வேதனையோ...
துள்ளி ஓடும் உன்னை எவனும்
தொட்டு விட முடியாது என எண்ணியது தான் உனக்கு
துன்பமோ...

உன்னுள்தான் உச்சிமுதல் பாதம் வரை எத்தனை தெய்வங்கள் என எம் சாஸ்திரம் சொன்னது....
அத்துணை தெய்வமும் கொள்ளட்டும் ஏம்மேல் கோபம்
உன் அகம் ஒரு புண் பட்டு இருந்தால்....

தாய் இழந்த எத்தனை சேய் தான்
உன் உதிரம் குடித்து வளர்ந்தது இந்த கோளத்தில்...
அத்துணை ஆடவனும் வாள் வீசட்டும் எம்மேல் உன்னை நான் தினம் வணங்க தவறி இருந்தால்...

மலட்டுபால் குடித்து என் சந்ததி நோய் கொண்டு வாழ...
எவன் அறுப்பான் என் குல தெய்வத்தின் கருவை...

இனி என் சந்ததி என்றுமே இல்லாது போகட்டும்... உன்னை தொலைத்து கண்ட கார்பரேட் கழிவுகளை குடிப்பதற்கு...

கலங்காதே என் கொஞ்சும் காளையா... எம் இறுதி மூச்சு கொண்டு உன் புகழ் கோனாது காத்திடுவேன்.. என்றும் என் அடையாளம் பேணாது பார்த்திடுவேன்....