சிந்தும்... சிதறும்...
தத்தும்... ததும்பும்..
எந்தன் காதல்...
அவள் சிந்தூர செவ்விதல் மத்தியில்...
கெஞ்சும்.. கதறும்...
கொஞ்சும்.. குலையும்...
எந்தன் இதயம்...
அவள் கயல்விழி கடைக்கண்
பார்வையில்...
சுண்டும்.. சுருங்கும்...
மருளும்... ஒடுங்கும்...
எந்தன் ஜீவன்...
அவளின் தேர்ந்த கார்குழல்
சுருள்களில்...
தெளிவான புத்தி கொண்டு
இருந்தேன் அன்று...
உன் அளவான இடையால் புத்திகேட்டு திரிகிறேன் இன்று...
புத்தனை போல் சாந்தம் கொண்டு
சிரித்தேன் அன்று...
சிங்கார நடையாள் உன் ஆசையில் புத்தம் துறந்தேன் இன்று...
நெட்டி முறிக்கும் உந்தன்
குட்டி விரலின் ஒரு சீண்டல் பொதும்...
முந்நூறு ஆண்டுகள் வாழ்திடுவேன்..
கொட்டி சிரிக்கும் உந்தன்
அலர் புன்னகை என்னிடம் சிந்திடு போதும்...
நிலவையும் நீராட்டி விற்றிடுவேன்...
மலரும் மயங்கியது.. ஆடையும் நானியது... மையும் சிவந்தது...
காலமும் உறைந்தது..
மலரும் மயங்கியது..
உன் மயிரிதழ் அது தீண்டுகையில்...
ஆடையும் நானியது..
உன் மேனியதில் நீ பூட்டுகயில்...
மையும் அது சிவந்தது..
உன் கண்மணி அதனில் பூசுகையில்...
காலமும் உறைந்தது..
உன்தன் கை கடிகாரம் நீ பார்க்கையில்...
எதுவும் நிலை இழந்து காதல் கொள்ளும் அத்துணை அழகியடி நீ
பிரமனும் சற்றே தடுமாறி இருப்பான் படைக்கயில் அப்படி ஓர் அழகியடி.. நீ
மன்மத மதுவே... காதல் ரதியே.
கயவன் கிளியே... பாறை மயிலே..
மன்மத மதுவே...
பார்வை எனும் பாணம் தொடுக்கிறாய்...
காதல் ரதியே..
ஆண்மகன் இதயம் துளைக்கிறாய்
கயவன் கிளியே...
மென்காமம் என்னுள் தினிக்கிறாய்
பாறை மயிலே..
விரைவாக வானில் சிறகடிக்கிறாய்
இந்த பிறவில் தவம் கொள்கிறேன்.. மீண்டும் ஒரு பிறவி வேண்டும் என்று...
மறு பிறவியில் பயனாய் உன்னை
கொள்வேன்.. என் பிறப்பின் அர்த்தம் நீ என்று...
No comments:
Post a Comment