Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Sunday, December 11, 2016

பாரதிக்கு என் பிறந்தநாள் கீர்த்தனை

நாவினில் ருசியில்லை.. செவிக்கு பசி யில்லை
நெஞ்சில் கொண்ட தாபம் இன்னும் அடங்கவில்லை..
துன்பம் தீரவில்லை.. கோபம் கொள்ளவில்லை..
இதை தீர்க்க போதையின்றி எனக்கு வழி ஏதுமில்லை...

கோப்பை மதுவோ
கொஞ்சும் இளங்கிளியோ
புகையோ.. பொடியோ.. கள்லோ.. கனலோ...காதலோ...
எத்தனை போதையிலும்.. நாட்டமில்லை.. நான் தேடிய போதை இன்னும் கிட்டவில்லை..

உள்ளம் திளைக்கும்...
என் உருகுலைக்கும்...
காதல் முளைக்கும்....
அப்படி ஒரு நல்ல போதை வேண்டும் எனக்கு..

தொட்டால் அனல் கொதிக்கும்..
பார்த்தால் பயம் நெறிக்கும்..
கேட்டால் உடல் சிலிர்க்கும்..
அத்துணை நல்ல போதை வேண்டும் எனக்கு..

எளிதில் கிடைக்கும்..
அரிதாய் இருக்கும்..
மாய உருவம் கொடுக்கும்
என் மதி கெடுக்கும் போதை வேண்டும் எனக்கு..

காதல் இருக்கும் அதில்
கோபமும் சுரக்கும்..
காமம் திளைக்கும்..மேலும்
பக்தியும் மணக்கும்..
விசித்திர போதை வேண்டும் எனக்கு..

சத்தினை உருக்கி..
எத்தனை பேருக்கும்
பித்தினை தெளிக்கும்
நித்தம் இனிக்கும் போதை வேண்டும் எனக்கு..

இத்தனை கொண்ட போதை தயாரிக்க
எத்துணை யுகம் கொள்ளுமோ எண்ணி ஏங்கி இளைத்து பின் திலைத்தேன்.. உன்னை போல் தன் மீசை முறுக்கி நிற்க்கும் நின் கவிகளை கண்டு..

அத்துணை ஜென்மத்திலும் உன் கவி குடித்து வாழ ஆசை.. எத்துணை ஜென்மம் தின்று தொலைக்குமோ உன் கவி குடிக்கும் என் பேராசை...