அகரம் பொல் எங்கள் ஆதி ஆனாய்..
எங்கள் அத்தனைக்கும் நீ வேர் ஆனாய்..
தக்க வயதில் என் தோழன் ஆனாய்..
தர்மனாய் துவண்டால் நீ எனக்கு கண்ணனும் ஆனாய்...
நேர்பட பேசி நிற்கையில் என் கண்ணுக்கு சில நேரம் நீ பாரதி ஆனாய்...
பாலகனாய் உன் விரல் பற்றி நடக்கையில் என் தகப்பன் வேகம் தொட நான் சற்றே ஓட வேண்டி வரும்...
நம் ஸ்கூட்டர் சவாரியின் போது நடந்து செல்லும் என் தோழனை நையாண்டியது நினைவில் வரும்..
பழக்கம் அறியா அன்னியர் மத்தியில் யாரோ வேலு அண்ணே என்ன சொல்லி ஓடி வந்தால் அது எனக்கு கர்வம் தரும்...
காகித காந்தி உறவு சேர்க்கும் பெற்றோர் மத்தியில் அறமும் அன்பும் சேர சுற்றம் சேர்த்தாயே அதுவே எனக்கு பெருமை தரும்..
தன் கனவை பிள்ளையின் மெல் திணிக்கும் கடும்கோளர்கள் மத்தியில் நீ மட்டும் ஏன் என் கனவுகளை உன் கண்ணில் சுமக்கிறாய்...
எப்படியும் வாழலாம் எனும் நரன்திண்ணிகள் மத்தியில் இப்படி வாழ்வதே அறம் என எப்படி சுகிக்கிறாய்...
என்ன தவம் செய்தால் மீண்டும் உன் மகனாய் நான் பிறக்கலாம்?
என்ன சுகம் செய்தால் என் தந்தைக்கு அது கைமாறாக இருக்கலாம்?
ஏதேனும் உன் புகழ் நிற்க இவ்வுலகில் பதில் செய்திடுவேன் அது மேல் நம்பிக்கை உண்டு என்னக்கு...
நல்ல அறிவும், நல்ல குணமும், தெளிந்த மதியும்.. கொஞ்சும் தமிழும் தந்தைக்கு என்றும் நன்றி சொல்வேன் உனக்கு...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா...
No comments:
Post a Comment