தையர் புகழ் பாடீர்...
அந்த வைய புகழ் பாடீர்...
பேதை புகழ் பாடீர்...
அக்கோதை புகழ் பாடீர்...
காதல் என்ப அது வெறும் சொற்பம்..
பக்தி என்றே அதன் பெயர் நிற்கும்..
அவள் தேகம் என்றே மதி விக்கும்..
இல்லை பேதம் அவளே அனைத்திற்கும்..
உதிரத்தின் உறவோ அவள் செய்தது..
இல்லை,
வையகமே இங்கு அவள் படைத்தது..
ஈசன் பாத்திரமோ அவள் நிறைத்தது..
அவளே,
அன்னம் பூரணமாய் சரணம் என்றது..
கொடுப்பார் எல்லாம் பெண் பெயர் கொண்டது...
எடுப்பார் பிச்சை இதில் ஆண்(ண)வம் என்னது...
ஆலயம் இல்லா ஊர் நரகம் என்றது...
தெய்வம் தொலைத்தபின் ஆலயம் எங்கது..
மங்கையர் மதிக்காதார் மரமோ என்றது..
கல்லிலும் பெண்ணே கடவுள் ஆனது...
அங்கனை துயரம் கடவுள் உயிர் துளைக்கும் என காப்பியம் சொன்னது..
அதனை மறந்து ஆடும் மனிதா அமரமாதர் நோவு கேடினும் கொடியது...
No comments:
Post a Comment