பேருந்தே நிற்காதே...
என்னவள் இறங்கிடுவாள்..
பேருந்தே நிற்காதே..
என்னவள் மறைந்திடுவாள்...
அவள் சூடிய முல்லைக்கு முன்பே
என் உள்ளம் வாடிடும்.. அதனால்.
பேருந்தே நிற்காதே...
அவள் கால் கொலுசு போல்
என் ஆண்மை கதறிடும்.. அதனால்..
பேருந்தே நிற்காதே...
யுவதி அவள் சிரிப்பு என் ஆயுளை குடித்து முடிக்கும் அதுவரை..
பேருந்தே நிற்காதே..
குமரி இமை இரண்டும் என் ஜீவன் பார்த்தே தேயும் அதுவரை..
பேருந்தே நிற்காதே...
ஆடி செல்லும் உன்னை தன் நடை கொண்டு சாய்ப்பாள் .. அதற்காக..
பேருந்தே நிற்காதே..
சுடர் விழி வாங்கி பிறந்தவள் இவள் உன்னை பார்ப்பாள்.. அதற்க்காக..
பேருந்தே நிற்காதே...
பேருந்தே நிற்காதே
என்னவள் இறங்கிடுவாள்..
பேருந்தே நிற்காதே..
என்னவள் மறைத்திடுவாள்..
No comments:
Post a Comment