துவிதல் வானம்..
கருத்தரித்தன
நிறைமாத கற்பினியாய்
மென் நடை பழகி...
அந்த ஆடவன் அவன் ஆதவன்
கதிர் ஒளித்து..
கோள் பந்தை காதலாய்
கட்டி அனைத்தாள்..
இந்திரன் அடியோ.. பிரசவ வலியோ.. காதலின் உச்சமோ..
இடியென கதறினாள்... ஐயோ பாவம்
கருணை பார்வையாய்..
அனல் விழியை கொண்டு நோக்கினாள்..
மின்னல் ஒளியென.. ஒரு தாபம்
இதனை அழகோ இவளின் கண்கள் என்னும் முன்னே வலி கொல்லாமல் விழி நனைத்தால்
சிந்திய முதல் துளி..சின்னதாய் உருகிய பனித்துளி..
மேலும் ஒரு சவுக்கடி இடியென கதறினாள்.. இம்முறை
ஓவென அழுகிறாள்..
இதனை துன்பமோ இவளின் வாழ்க்கை எண்ணி கொண்டே தார் சாலைகள் பார்த்தேன்
அவள் கண்ணீரில் அவை உருகி கரைந்தே போய்விட்டன
காரை பூசிய தளங்களில் வடிய தெரியாமல்.. தேங்கி நின்றன அவள் கண்ணீர்.. மெல்ல தேங்கின வெள்ளம்..
இத்தனை நேரம் காதலும், கருணையும் கொண்டு ரசித்த எம் கண்கள் இப்பொது ஐயம் கொண்டு நிற்கின்றன..போதும் தாயே அளவாய் அழுதிடு... அடிக்கடி அழுதிடு..
ஒரேடியாய் ஒரு முறையாய் ஒரு ஆண்டிற்கே சேர்த்து அழுதிடாதே...
எனக்கு உன் வரண்ட தேகமும் வேண்டாம்.. வெள்ளம் என்னும் போர் கோலமும் வேண்டாம்..
அழகியாய்.. குமரியாய்.. ரதியாய்..
அளவாய் அணிந்திடு அழகாய் மிளிர்ந்திடு.. ஆடவர் உலகம் கவர்ந்திடு...
No comments:
Post a Comment