Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Thursday, July 18, 2019

ஏக்கம்

கானல் நீரே...
ஆறாம் விரலே..
எட்டா அறிவே...
புரியா கவியே...

உன்னை காண தவிக்கிறேன்..
நிதம் ஏங்கி துடிக்கிறேன்...
வரமாய் என் முன்னே வந்திடு..
பார்வைக்கு விருந்து தந்திடு...

பேசா மொழியே..
கோவில் சிலையே..
அமைதி கடலே...
இன்ப நகலே...

குரல் கேட்ட தவிக்கிறேன்...
குலாவி சிரிக்க அழைக்கிறேன்...
சிறு வார்த்தை உதிர்த்திடு...
மறுமொழிக்கு சிரித்திடு...

வான நிலவே...
தூர அழகே...
எட்டா கனியே..
உறையும் நொடியே...

கரம் கோர்க்க நினைக்கிறேன்..
மென்னடை பழக விழைகிறேன்..
என் சபரிசம் தீண்டிடு...
உலகம் என்னோடு நடந்திடு...

சிறு துயரமே...
குறு பாரமே...
சின்ன வலியே..
மெல்லிய வேதனையே...

உன்னை சும்மக்க நினைக்கிறேன்..
வாழ்வை ரசிக்க சுகிக்கிறேன்..
என்னோடு இன்றே வந்திடு...
இறுதி கணமும் என்னோடு இருந்திடு...

No comments:

Post a Comment